×

விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை: விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை மற்றும் விநியோகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்த 8 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

The post விதிமீறலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து: மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Welfare Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து